சனி, 24 ஜூலை, 2010

பெண்மைப் பூக்கள்..!


பிரபஞ்சப் பூந்தோட்டத்தில்
மலர்ந்த பெண்மைப் பூக்கள்..
வர்க்கப் பேதத்தால்
கருகிப் போயின...

குடும்பப் பத்திரிக்கைப் போர்வைப்
போர்த்தி நடுப் பக்கத்தில்
அரை நிர்வாணத்தைஆடையாய் ஆக்கி
வியாபாரம் இங்கு விரசமாய் நடக்குது...!

எழுத்தாளன் படைக்கும் பெண்கள்
கூடஅடிமையாய் இங்கே அவதரிக்கின்றனர்...
ஓவியன் தீட்டும் தூரிகை
கூடகவர்ச்சியை மையமாக்கிக் கருத்தரிக்கின்றனர்...

குட்டக் குட்ட குனிந்து
கொண்டேபெண்கள் கூட்டம் குனிந்தே நடக்குது...
கல்லானாலும் கணவன்
என்றேபெண்மைகள்
இங்கேமெழுகாய் உருகுது...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக