ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஒரு போராளிக்கு...


தோழா...
தாலாட்டுக் கேட்டது போதும்..
மரணம் நம்மை தாலாட்டும் காலம்
வந்து விட்டது...

தினம் நீ தரிசனத்திற்காக
காத்திருந்தது போதும்...
மரண தரிசனம் காணும் நாள்
நெருங்கி விட்டது...

உன்னை நீ
அலங்காரப் படுத்திக் கொள்ளாதே...
நமக்காக அங்கு
அலங்காரப் பாடைகள்
தயாராகிக் கொண்டிருக்கிறது...

தோழா.. புகைப் பிடிப்பதை நிறுத்து..
நம்மை விரைவில் புகை சூழப் போவது
உனக்குத் தெரியாதா..?
இளைப்பாறாதே...
நீண்ட இளைப்பாறலக்கு
தயார் செய்து கொள்வோம் வா...!

இன்றைய மாலை மரியாதைகளுக்கு
மயங்கி நிற்காதே...
நாளை உன் மரணத்திற்கு வரும்
மாலைக்குத் தான் மரியாதை உண்டு..!

இன்றைய இருள்களின்
குளிர்ந்த இன்பங்களை விட
நாளைய பகல்களின்
வெப்பங்கள் மகத்துவம் மிக்கது..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக