செவ்வாய், 5 அக்டோபர், 2010

மெளனத்தை மொழியாக்கித் தா...!

உன்
மெளனத்தை மொழியாக்கித் தா...
ஆயிரம் கவிதைகள் எழுதிடுவேன்..!
பார்வையாலே அபிநயத்தை தா..
எல்லோரா ஓவியமாய் தீட்டிடுவேன்..!
இதழாலே ஒரு முத்தம் தா...

அழகு சிலையாக

உனை நான் வடித்திடுவேன்..!

உன் இதயத்தை எனக்காக தா...

என்னையே உன்னிடத்தில்
தந்திடுவேன்...!


இரங்கற்பா...

புழுதி படாத நிலாவே... நீ
புறப்பட்டு விட்டாய்...
நான் புலம்பித் தவிக்கின்றேன்..!
உனக்கு இரங்கற்பா எழுத
என் விரல்கள் சம்மதிக்கவில்லை...
எனினும் எனது
ஞாபகத் தாஜ்மகாலாக
இக்கவிதாஞ்சலி இருக்கட்டும்...!


விடுகதை

நீ ...
ஒரு சிறுகதைதான் என நினைத்தேன்.ஆனால்
தொடர்கதை ஆனாய்..
உன்னை விடுகதை என நினைத்தேன்...நீயோ
என்னை விடாக்கதை ஆகி விட்டாயே..
!