செவ்வாய், 29 ஜூன், 2010

என்னை புதை...

மரணத்திற்கு முன்பே
என்னை புதை
உன் இதயத்தில்...

என்னவள்...

ஊரெல்லாம் பூ வாசம்
ஓ....
என்னவள் போகிறாளா...?

மங்கை...

விழி மூடினேன்
கட்டி அனைத்தாள்.
கனவு மங்கை...

நானதான் நீ....

உன்னை ரசிப்பவர்களை
நான் ரசிப்பேன்...
உன்னை நேசிப்பவர்களை
நான் நேசிப்பேன்...
உன்னை பாராடுபவர்களை
நான் பாராட்டுவேன்...
ஏனென்றால் நீதான் நான்...
நான்தான் நீ....

முகம் அழிக்கும்....


சோரம் போன
துப்பாக்கி
வீரம் பேசுகிறது...
அவனின் கண்ணீர்
திராவகமாய் மாறி
நாளை
இராணுவத்தின்
முகம் அழிக்கும்.
(அமெரிக்க இராணுவம் வியட்நாமில்அப்பாவி மக்களை
கொன்று குவித்த போது எடுத்த படங்களில்இதுவும் ஒன்று.- முத்தாரம் புகை பட கவிதை போட்டியில் நான் எழுதி பரிசு பெற்ற கவிதை. 1991 ல்.)

பித்தனாய் நான் ஆனேன்...

கத்தி இன்றி என்னைக் காயப்படுத்தி
ரத்த இழப்பின்றி - என்
சித்தம் கலங்கிட வைததவளே...
புத்தனாய் நான் இருந்தேன்...
நித்தம் நித்தம் நீயாய் வந்து
புத்தம் புது புன்னகையை
சத்தமாய் பரிசளித்தாய்... இன்று
பித்தனாய் நான் ஆனேன்...