திங்கள், 7 ஜூலை, 2014

பத்துபாட்டு..!


முத்தமிழின் ரெத்தினமே
வைரமணி சித்திரமே
மூவேந்தர் வளர்த்த
செந்தமிழின் சிறு நகையே..

நீ
திருமுருகாற்றுப்படை நடத்தி
பெருநாற்றுப் படை எடுத்து
சிறுபாணாற்றுப் படை கடந்து
பெரும்பாணாற்றுப் படை வென்று
முல்லைப் பாட்டு பாடி
மதுரைக் காஞ்சிக்கு வா..

நெடுநல் வாடையில் நெகிழ்ந்து
குறிஞ்சிப்பாட்டில் முகிழ்ந்து
பட்டினப்பாலையில் மகிழ்ந்து
மலைபடுகடாமில் மனமேந்தி.....

பத்துமாதம் சுமந்த உன் தாய்......
பத்துப் பாட்டோடு விழித்திருக்கிறேன்
விரைந்து வாடா... என் வீரத்திரு மகனே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக