இடைவிடாத
குண்டு மழைகளுக்கிடையில்
எனை அழைத்தாய்..
அச்சம் தவிர்த்து
ஆறுதல் தேடினாய்
நெஞ்சில் இடம் தந்து
நேச மழை பொழிந்தேன்..
என் ஆண்மை வாசத்தில்
அடைக்கலமானாய்...!
விழிநீரைத் துடைத்துவிட்டு
மொழியில்லா மெளனம் காத்தாய்..
தொட்டு தொட்டு உனை ரசித்து விட்டு
விட்டு விட்டுப் போக மனதில்லை..
எல்லை கடந்து போகிறேன்..
ஆதலின் உன்னிடம் எல்லை மீறாமல் போகிறேன்..
புரட்சி விடியலில்
பூபாளம் இசைக்க
நெடும்பயணம் செல்கின்றேன்..
காதல் அழைக்கிறது
கடமை தடுக்கிறது...
காத்திரு என்
பாசச் சுடர் மதியே...
துப்பாக்கி ஓசை அடங்கி
நமக்கென்றொரு
நாடு மலரும்
நாள் வரை காத்திரு
என் காந்த மலரழகே..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக