செவ்வாய், 29 ஜூன், 2010

முகம் அழிக்கும்....


சோரம் போன
துப்பாக்கி
வீரம் பேசுகிறது...
அவனின் கண்ணீர்
திராவகமாய் மாறி
நாளை
இராணுவத்தின்
முகம் அழிக்கும்.
(அமெரிக்க இராணுவம் வியட்நாமில்அப்பாவி மக்களை
கொன்று குவித்த போது எடுத்த படங்களில்இதுவும் ஒன்று.- முத்தாரம் புகை பட கவிதை போட்டியில் நான் எழுதி பரிசு பெற்ற கவிதை. 1991 ல்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக